ஐந்து மாவட்டங்களில் வசிப்பவர்களுக்கு 1ஆம் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி இரத்தினபுரி , கேகாலை மற்றும் வரக்காபொல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் கொழும்பு சீதாவக்க பிரதேச செயலகப் பிரிவு, களுத்துறை இங்கிரிய மற்றும் காலி நாகொட ஆகிய பிரதேசங்களில் வசிப்பவர்களுக்கு மண்சரிவு விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய இந்த எச்சரிக்கை இன்று (திங்கட்கிழமை) இரவு 7 மணி வரை அமுலில் இருக்கும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

Share.
Exit mobile version