தலவாக்கலையிலிருந்து ஹட்டன் நோக்கி சென்ற பஸ்ஸில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் ஹட்டன் பொலிஸாரால் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று முற்பகல் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

தலவாக்கலையில் இருந்து ஹட்டன் நோக்கிச் சென்ற தனியார் பஸ்ஸில் கொட்டக்கலையில் ஆணொருவர் 65 ஆயிரம் ரூபா பணத்தை வங்கியில் வைப்பிலிடுதற்காக கொண்டுச் சென்றுள்ளார்

இதன்போது குடாகம பகுதியில் வைத்து 3 பெண்கள் பஸ்ஸில் ஏறிய நிலையில், அப்பெண்களில் ஒருவர் குறித்த ஆணுக்கு அருகில் நின்றதாகவும் சில மணி நேரத்தின் பின்னர் குறித்த ஆணின் பணப்பை காணாமல் போனதாகவும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் குறித்த ஆண். அருகில் இருந்த பெண் பணத்தை எடுத்ததாக கூறி அந்த பெண்ணை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார். இந்நிலையில், குறித்த பெண்ணுடன் வந்த ஏனைய இருவரும் தலைமறைவாகியுள்ளதாகத் தெரியவருகிறது.

அவிசாவளைப் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இவருடன் மேலும் இரண்டு பெண்கள் தொடர்புபட்டுள்ளதாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வருவதுடன் மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Exit mobile version