தமிழகத்தில் TENTEA நிறுவனத்தின் கீழ் பணிப்புரியும் தொழிலாளர்களுக்கு அரச நிதி ஒதுக்கீட்டீல் 677 வீடுகள் அமைத்து தருவதாக தமிழக முதலமைச்சர் மு.கஸ்டாலின் இன்று (வெள்ளிக்கிழமை) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் TENTEA நிறுவனத்தின் கீழ் பணிப்புரியும் இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு புலம்பெயர்ந்து சென்ற மலையக தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மற்றும் குடியிருப்பு பிரச்சினைகள் குறித்து இம்மாதம் 16ஆம் திகதி இ.தொ.காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் முதலமைச்சரின் நேரடி கவனத்திற்கு கொண்டுசென்றார்.

இதனையடுத்து, இந்தவிடயம் குறித்து முழுமையாக ஆராய்ந்து உரிய தீர்வு வழங்குவதாக தமிழக முதல்வர் செந்தில் தொண்டமானிடம் சாதகமாக தெரிவித்திருந்தார்.

இந்த நிலையிலேயே, இன்று TENTEA நிறுவனத்தின் கீழ் பணிப்புரியும் தொழிலாளர்களுக்கு அரச நிதி ஒதுக்கீட்டீல் 677 வீடுகள் அமைத்து தருவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில், புலம்பெயர்ந்த மலையக மக்கள் சார்பாக இ.தொ.கா. தமிழக முதலமைச்சருக்கு தனது நன்றிகளை தெரிவித்துள்ளது.

Share.
Exit mobile version