இந்தியாவின் தெலுங்கானா மாநிலம் ஜெகத்தியாலா மாவட்டத்தில் உள்ள பாலபள்ளி கிராமத்தை சேர்ந்த மாதவ் என்பவர், பக்கத்து ஊரை சேர்ந்த அச்சிதா என்ற பெண்ணை காதலித்து ஆறு மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்துக்கு பின்னர் இருவரும் தனி வீடு எடுத்து வசித்து வந்த நிலையில். மகள் தங்களுக்கு விருப்பமில்லாத நபரை காதலித்து திருமணம் செய்து கொண்டதால் அச்சிதாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆத்திரத்தில் இருந்துள்ளனர்.

இதன்போது சம்பவத்தன்று இரண்டு கார்களில் உறவினர்களுடன் காதல் தம்பதி வசித்த வீட்டிற்கு சென்ற அச்சிதாவின் பெற்றோர் அவர்களை கடுமையாக மிரட்டியதோடு தங்கள் மகள் அச்சிதாவை மட்டும் காரில் ஏற்றி கடத்தி சென்றதாக கூறப்படுகின்றது.

வீட்டுக்கு அழைத்து செல்லப்பட்ட அச்சிதாவுக்கு பாலில் தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்து குடிக்க செய்து, அவரின் தலைமுடியை மொட்டை அடித்துள்ளனர். பின்னர் அவமானப்படுத்தி கணவன் வீட்டிற்கு விரட்டி விட்டதாக அச்சிதா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதன்போது அச்சிதா அளித்த முறைப்பாட்டின் பேரில், வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார், இளம் பெண்ணை மொட்டை அடித்து கொடுமைப்படுத்தியதாக, அவருடைய பெற்றோர் மற்றும் தாய்மாமன் ஆகியோரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Share.
Exit mobile version