பெண் ஒருவரை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் தனுஷ்க்க குணதிலக்க கைது செய்யப்பட்டமையை தொடர்ந்து விளையாட்டு வீரர்களின் நடத்தைகள் தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சிற்கு பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சின் செயலாளர் அமல் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் குறித்த முறைப்பாடுகள் தொடர்பில் உள்ளக விசாரணைகளை முன்னெடுக்குமாறு இலங்கை கிரிக்கட் நிறுவனத்திற்கு அறிவித்துள்ளதாகவும் விளையாட்டு துறை அமைச்சின் செயலாளர் அமல் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்

Share.
Exit mobile version