நிட்டம்புவவில் ஏற்பட்ட அமைதியின்மையைத் தொடர்ந்து இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 3 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், ஒருவர் கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

நிட்டம்புவ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர்

 

நிட்டம்புவ பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தைத் தொடர்ந்து மொத்தம் 6 பேர் வத்துபிட்டிவல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் மூவர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் சம்பத் பெரேரா தெரிவித்துள்ளார்.

ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்களில் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பின்னர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அவர் கல்-எலிய ஹப்பிட்டிகம பகுதியைச் சேர்ந்த 27 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

Share.
Exit mobile version