பிரதமர் மஹிந்த ராஜபக்ச தமது பதவியை இராஜினாமா செய்யத் தீர்மானித்திருப்பதாக உயர்மட்ட அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. என முன்னனி தமிழ் இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதனையடுத்து புதிய அமைச்சரவை விரைவில் நியமிக்கப்படுமென சொல்லப்படுகிறது.

அரசியல் நெருக்கடியை தவிர்ப்பதற்காக இடைக்கால அரசொன்றை அமைக்கும் நோக்கில் மஹிந்த பிரதமர் பதவியை துறக்கத் தீர்மானித்துள்ளதாக சொல்லப்பட்டது.

இதனடிப்படையில்,

பிரதம மந்திரி மஹிந்த ராஜபக்ஷ, அரசாங்கம் மற்றும் கட்சிகளுக்குள் உடனடி அரசியல் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தவும், நாட்டை முன்னெடுப்பதற்காகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தனது இராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளார்.

இருப்பினும் ஜனாதிபதி அதை ஏற்கவில்லை!

Share.
Exit mobile version