வீதியில் இறங்கி போராடிய முல்லைத்தீவு மீனவர்கள் தாக்கப்பட்டமைக்கு, வடமாகாண கடற்றொழிலாளர் இணையம் கண்டனம் வெளியிட்டுள்ளது.

வடமராட்சியில் அமைந்துள்ள தனது அலுவலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் தலைவர் காத்தலிங்கம் அண்ணாமலை இந்த கண்டனத்தை பதிவு செய்தார்.

எதிர்வரும் 9ஆம் திகதி இந்த தாக்குதலுக்கு நல்ல பதில் தருவதாக அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்தவர்கள் உறுதியளித்ததாக அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டப்படாத நிலையில், வடக்கு மாகாணம் தழுவிய போராட்டம் முன்னெடுக்கப்படுமென எச்சரித்தார்.

இதேவேளை மண்ணெண்ணெய் விநியோகம் வாரத்திற்கு ஒரு தடவை மாத்திரம் 29 லிட்டர் வழங்கப்படுவதாகவும் அது ஒரு நாளுக்கு மாத்திரமே போதுமானதாக உள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

Share.
Exit mobile version