பொலன்னறுவையில் சட்டவிரோதமாக புதையல் தோண்டும் பணிகளில் ஈடுபட்டிருந்த சந்தேக நபர்கள் இருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

விசேட பொலிஸ் அதிரடிப்படையின் அறலகங்வில முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலொன்றுக்கமைய நேற்று மாலை பொலன்னறுவை பொலிஸ் பிரிவிலுள்ள அறுணசிரிநிவாச பராக்கிரமசமுத்திர பகுதி வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது புதையல் தோண்டிக்கொண்டிருந்த சந்தேக நபர்கள் இருவரை கைது செய்துள்ளதுடன் புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்திய உபகரணங்கள் சிலவற்றையும் அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 20,48 வயதுடய பொலன்னறுவை பராக்கிரமசமுத்ர மற்றும் மாவனல்ல பகுதிகளை வசிப்பிடமாக கொண்டவர்கள் என்பது ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக குறித்த சந்தேக நபர்கள் இருவரையும் கைப்பற்றிய பொருட்களுடன் விசேட அதிரடிப்படையினர் பொலன்னறுவை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர்கள் பொலன்னறுவை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share.
Exit mobile version