வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் நேற்றையதினம் பறக்கும் படையணியினர் (Flying Squad ) வைத்தியசாலைக்கு திடீரென விஜயம் செய்து பரிசோதித்துள்ளனர்.

குறித்த சோதனை நடவடிக்கையில் கொழும்பிலிருந்து சென்ற பறக்கும் படையணியினர் வைத்தியசாலையிலுள்ள தாதியர், வைத்தியர், பொதுமக்கள், பணியாளர்கள், தாதிய பரிபாலகரின் கையொப்பமடங்கிய முக்கிய ஆவணங்களை பரிசோதித்துள்ளனர்.

ஆனால் பறக்கும் படையணியினர் நேற்றையதினம் குறித்த வைத்தியசாலையில் சோதனை செய்ய வந்தபோதும் கடமைக்கு வரவேண்டிய தாதிய பரிபாலகர் நேற்றையதினம் இரவு நேர கடமைக்கு வரல்லை எனவும் தெரியவந்துள்ளது.

அத்தோடு வவுனியா வைத்தியசாலையில் கடமைபுரியும் தாதிய பரிபாலகர் கடமையை சரிவர செய்வதில்லை எனவும் , இரவு 10 மணிக்கு அவர்கள் வீட்டுக்கு செல்வதும் குறிப்பிடத்தக்கது .

Share.
Exit mobile version