நாட்டில் காலாவதியாகவுள்ள பைசர் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏழு மில்லியன் பைசர் தடுப்பூசிகள் இவ்வாறு காலாவதியாகும் நிலையில் கையிறுப்பில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் எதிர்வரும் 31 ம் திகதியுடன் குறித்த பைசர் தடுப்பூசிகள் காலாவதியாகவுள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதால் இவ்வாறு தடுப்பூசிகள் கையிறுப்பில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தற்போது மக்கள் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுவதில்லை என சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

Share.
Exit mobile version