யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 36ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா, இன்று (வியாழக்கிழமை) நடைபெற்று வருகின்றது.

விழாவின் முதலாவது அமர்வு பல்கலைக்கழக வேந்தர் வாழ்நாள் பேராசிரியர் எஸ். பத்மநாதன் தலைமையில் பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறுகின்றது.

இன்று முதல் எதிர்வரும் 8ஆம் திகதி சனிக்கிழமை வரை மூன்று நாட்களில் எட்டு அமர்வுகளாக இந்தப் பட்டமளிப்பு விழா இடம்பெறவுள்ளது.

இந்த விழாவில் 2 ஆயிரத்து 378 பேர் பட்டங்களையும் தகைமைச் சான்றிதழ்களையும் பெற்றுக் கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Share.
Exit mobile version