துருக்கியிலிருந்து கீரிசுக்கு 2 படகுகளில் 100-க்கும் மேற்பட்டவர்கள் அகதிகளாக தப்பி சென்ற போது ஏற்பட்ட கடும் சூறாவளி காற்றினால் 2 படகுகளும் நிலை தடுமாறி பாறைகள் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகின.

இதையடுத்து, படகில் பயணம் செய்த அகதிகள் கடலில் மூழ்கினார்கள். சிலர் கடலில் தத்தளித்தபடி இருந்தனர். இதுபற்றி அறிந்ததும் கடலோர காவல்படையினர் விரைந்து சென்று 30 பேரை பத்திரமாக மீட்டனர்.

இந்நிலையில், 15 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகவும். மேலும், காணாமல் போன பலரை தேடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது..

Share.
Exit mobile version