ஆசிரியர் மற்றும் ஆசிரியர் தொழிலுக்கான பொறுப்புகளை நிறைவேற்ற அரசாங்கம் கடமைப்பட்டுள்ளது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

உலகின் தலைசிறந்த தொழில்களில் ஆசிரியர் தொழில் முதன்மையானது என்பதையும் உலகம் மற்றும் மனிதகுலம் வாழ்வதற்கு வழிகாட்டும் வழிகாட்டி ஆசிரியர் என்பதையும் இது காட்டுகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பிரதமர் தினேஷ் குணவர்தன விடுத்துள்ள அறிவிப்பில், கல்வி மறுமலர்ச்சியின் இதயமாகத் திகழும் ஆசிரியர்களுக்கு தேசம் மரியாதை செலுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.

Share.
Exit mobile version