இந்த வருடம் நாள் ஒன்றில் அதிகூடிய வருமானத்தை ஒக்டோபர் முதலாம் திகதி கொண்டாடப்பட்ட உலக சிறுவர் தினத்தில் தெஹிவளை மிருகக்காட்சிசாலை ஈட்டியுள்ளது.

இதன்படி, 50 இலட்சத்து 80,377 ரூபா வருமானமாக ஈட்டப்பட்டுள்ளது.

இதற்கு இணையாக ஏனைய சகல மிருகக்காட்சிசாலைகளிலும் நாள் ஒன்றில் அதிகூடிய வருமானம் ஈட்ட முடிந்ததாக விவசாய, வனஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

ஏனைய மிருகக்காட்சிசாலைகளின் வருமானம்

பின்னவல யானைகள் சரணாலயம்- 9 இலட்சத்து 47,000 ரூபா
பின்னவல மிருகக்காட்சிசாலை- 9 இலட்சத்து 49,200 ரூபா
ரிதியகம சஃபாரி பூங்கா- 8 இலட்சத்து 56,000 ரூபா

Share.
Exit mobile version