சிறைச்சாலையில் இருந்து தப்பிச் சென்ற நபர் ஒருவர் ஹோமாகம, பிடிபன பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹோமாகம பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்படும் போது குறித்த நபரிடமிருந்து 5.3 கிராம் ஹெராயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

24 வயதான இவர் பிட்டிபன-தெற்கு பகுதியைச் சேர்ந்தவராவார்.

அவர் பல்லன்சேன சிறைச்சாலையில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சிறையிலிருந்து தப்பியோடியவர் நீதிமன்ற அழைப்பாணை தவிர்த்துவிட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஹோமாகம நீதவான் நீதிமன்றில் விசாரணைக்குட்படுத்தப்பட்ட வழக்குகள் தொடர்பில் அவரைக் கைது செய்வதற்கு இரண்டு பிடியாணைகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

ஹோமாகம நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் எதிர்வரும் ஒக்டோபர் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஹோமாகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Exit mobile version