எரிசக்தி துறையில் முதலீடு செய்ய அவுஸ்திரேலியா பரிசீலித்து வருவதாக இலங்கை வெளியுறவு அமைச்சு இன்று தெரிவித்துள்ளது.

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீபன்ஸை கொழும்பில் சந்தித்துள்ளார்.

இதன்போது உள்நாட்டு சவால்களைச் சமாளிக்க அண்மையில் வழங்கப்பட்ட உடனடி மனிதாபிமான உதவிகளுக்கு வெளிவிவகார அமைச்சர் தமது நன்றியை தெரிவித்துள்ளார்.

இதன்போது ஆற்றல் மற்றும் கல்வித் துறையில் முதலீடு செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் அவுஸ்திரேலிய நிறுவனங்களின் முதலீடுகள் குறித்தும் அவர் கருத்துக்களை பரிமாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share.
Exit mobile version