பேருந்துகள் இயக்குவதை இன்று நள்ளிரவு முதல் நடைமுறையாகும் வகையில் இடைநிறுத்தவுள்ளதாக இலங்கையில் தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த பணிப்புறக்கணிப்பானது *இன்று நள்ளிரவு முதல் நாளைய தினம் நள்ளிரவு வரை நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்படும்* என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.

நாளை மட்டுமல்ல *எரிபொருள் இல்லாமல் பேருந்துகளை இயக்க முடியாது என்பதால் அடுத்த சில நாட்களிலும் பேருந்துகள் சேவையில் ஈடுபடாமல் இருக்க வாய்ப்பு இருப்பதாக* அவர் தெரிவித்துள்ளார்.

Share.
Exit mobile version