மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள 4 வீடுகளை உடைத்து அங்கிருந்து 17 இலச்சம் ரூபா பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்ட 23 வயதுடைய இளைஞன் ஒருவரை ஹரோயின் போதைப் பொருளுடன் நேற்று (திங்கட்கிழமை) கைது செய்துள்ளதாகவும் திருடப்பட்ட பொருட்களை மீட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள 4 வீடுகளில் பெறுமதியான பொருடக்கள் தங்க ஆபரணங்கள் திருட்டு போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து பொலிஸ் நிலைய பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுவந்தனர்.

இந்த நிலையில் நாவலடி பிரதேசத்தில் வீடு ஒன்றை உடைத்து அங்கிருந்து ரைஸ்குக்கர் ஒன்று, தங்க ஆபரணமும். பிறைந்து றைச்சேனை பிரதேசத்தில் தொலைக்காட்சி பெட்டி ஒன்று, ரைஸ்குக்கர் 20 ஆயிரம் ரூபா பணமும், செம்மண்ஓடை பிரதேசத்தில் வீடு ஒன்றின் கதவை உடைத்து காஸ்சிலிண்டர் ஒன்று, மணிக்கூடு, 20 ஆயிரம் ரூபா பணமும்.

நாவலடி பகுதியில் கையடக்க தொலைபேசியான அப்பிள் போன் ஒன்று சம்சோங் போன் ஒன்றும் 70 ஆயிரம் ரூபா பணமும் திருடிச் சென்ற நாவலடி பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயது இளைஞனை ஹரோயின் போதைப் பொருளுடன் கைது செய்ததுடன் திருடப்பட்ட பொருட்களை மீட்டுவருவதாக தெரிவித்த பொலிசார்

Share.
Exit mobile version