நாடளாவிய ரீதியில் அடுத்த வருடம் முதல் அனைத்து பாடசாலைகளிலும் முதலாம் ஆண்டு முதல் ஆங்கிலம் கற்பிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் இன்று (திங்கட்கிழமை) உரையாற்றும்போதே, கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதனை தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, உத்தேச கல்வி சீர்திருத்தத்தின் கீழ், முதலாம் தரத்தில் இருந்து பிள்ளைகளுக்கு ஆங்கிலம் கற்பிக்கும் பணி அடுத்த வருடம் மார்ச் மாதம் முதல் ஆரம்பிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share.
Exit mobile version