அரச ஊழியர்களின் சம்பளம் அடுத்த மாதம் முதல் குறைக்கப்படும் என பரப்பப்படும் செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களைத் தூண்டி விடும் இத்தகைய செயற்பாடுகளை வன்மையாகக் கண்டிப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

மேலும் அரசாங்கம் அவ்வாறானதொரு தீர்மானம் எதனையும் எடுக்கவில்லை என்றும் அரச ஊழியர்களின் தொழிலை பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகக் கருதப்படும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share.
Exit mobile version