பிரதி சபாநாயகர் நியமனம் இன்று (05) பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய ராஜினாமா செய்ததை அடுத்து பிரதி சபாநாயகர் பதவி வெற்றிடமாகியுள்ளது.

அதன்படி இன்று பிரதி சபாநாயகரை நியமிப்பதற்கு நேற்று (04) நடைபெற்ற கட்சித் தலைமைக் கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டது.

பிரதி சபாநாயகர் பதவிக்கு பலரின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளதுடன், ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதி சபாநாயகராக பாராளுமன்ற உறுப்பினர் அஜித் ராஜபக்ஷவை நியமிக்க அரசாங்க கட்சி குழு கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரதி சபாநாயகர் பதவிக்கு எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினரின் ஒருவரின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் இன்று காலை இடம்பெறும் குழுக் கூட்டத்தில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 11 சுயேட்சை உறுப்பினர்களும் பிரதி சபாநாயகர் பதவிக்கு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் பெயரை முன்மொழியவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Share.
Exit mobile version