இன்று பொத்துவில் இன்ஸ்பெக்டர் ஏத்தம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் சிறுவர் தினம் கொண்டாடப்பட்டது.

பாடசாலையின் அதிபர் திருமதி சோபிதா அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த சிறுவர் தின கொண்டாட்டம் இன்ஸ்பெக்டர் ஏத்தம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் ஊர்வலமாக ஆரம்பித்து இன்ஸ்பெக்டர் ஏத்தம் சாலம்பையடி பிள்ளையார் ஆலயத்தை வந்தடைந்து அங்கே அப்பாடசாலை மாணவச் சிறார்களுக்கு தாக சாந்தி வழங்கப்பட்டதோடு அங்கே சிறு கூட்டம் இடம்பெற்று பாடசாலை ஆசிரியர்கள் உரையாற்றிய பின்னர் மீண்டும் மாணவர்கள் ஊர்வலமாக மகிழ்ச்சியோடு வீதி வழியாக சென்றதைக் காணக்கூடியதாக இருந்தது.

நிறைந்த சிறுவர்கள் பல வர்ண பலூன்களை கையில் ஏந்தியவாறும் சுலோக அட்டைகளே கையில் ஏந்தியவாறும் வந்து மிகவும் சிறப்பான முறையில் இந்த சிறுவர் தின நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.

Share.
Exit mobile version