உலகம் முன்னோக்கிச் சென்றாலும் எமது நாடு ஓரிடத்தில் அசையாமல்  நிறுத்தப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

வெல்லவாய தனமல்வில சபைக் கூட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தற்போதைய ஜனாதிபதியும், அரசாங்கமும் ஒரே இடத்தில் சுழன்று கொண்டிருக்க, உலகம் முன்னோக்கிச் செல்கிறதென அவர் தெரிவித்துள்ளார்.

நாடு ஓரிடத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் நாட்டின் எதிர்காலம் குறித்த புரிதல் அவர்களுக்கு இல்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நிலையிலும் எதிர்க்கட்சியாக ஐக்கிய மக்கள் சக்தி மக்களுக்காக பல பணிகளை செய்துள்ளதாகவும் அதற்கு சக்வாலா மற்றும் காஸா திட்டங்கள் சிறந்த எடுத்துக்காட்டு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share.
Exit mobile version