கொள்ளுபிட்டிய பகுதியில் அலரிமாளிகைக்கு முன்பாக பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் அவர்களின் சகல கட்டமைப்புக்களையும் அகற்றுமாறு கோட்டை நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மைனா கோ கம என்ற பெயரில் அலரிமாளிகைக்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த ஆர்ப்பாட்டம் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் உள்ளதாக பொலிஸாரினால் முன்வைக்கப்பட்ட விடயங்களை கருத்திற் கொண்டு நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

Share.
Exit mobile version