தீ விபத்து ஏற்பட்ட காஜிமாவத்தை வீட்டுத் தொகுதிக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இன்று காலை சென்றுள்ளார்.

முஜிபுர் ரஹ்மான் வருகையை அடுத்து அங்கிருந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

குறித்த தீ விபத்தினால் தமது வீடுகளை இழந்த தமக்கு நீதி வழங்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானிடம் கோரிக்கை விடுத்தனர்.

இருப்பினும் வீட்டுப் பிரச்சினைகள் தொடர்பான தீர்வுகளை விரைவில் வழங்க நடவடிக்கை எடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

Share.
Exit mobile version