நாட்டில் தற்போது கடனட்டை பாவனையாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதன்படி கடந்த ஜுலை மாதத்தில் மாத்திரம் செயலில் உள்ள கடன் அட்டைகளின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 40 ஆக குறைவடைந்துள்ளது.

இதேவேளை நாட்டில் தற்போது வாகனங்களின் விலை சடுதியாக குறைவடைந்து வருவதாக வாகன இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்

அதிகரித்த வட்டி வீதம் எரிபொருள் விலை உயர்வு மற்றும் உதிரிபாகங்களுக்கான தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் காரணமாக வாகனங்களின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரென்ஜிகே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இதேவேளை வாகனங்களின் விலை குறைவடைந்துள்ள போதிலும் உதிரிபாகங்கள் , வாகனங்களை திருத்தல் மற்றும் பழுதுபார்த்தல் ஆகியவற்றுக்கான கட்டணங்கள் சடுதியாக அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share.
Exit mobile version