பாடசாலை விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த 12 வயதுச் சிறுமியை முகமூடி நபர் ஒருவர் கடத்திச் செல்ல முற்பட்ட போது, அருகில் உள்ள தோட்டத்தில் பணிபுரியும் பெண் ஒருவர் ஓடிச்சென்று சிறுமியைக் காப்பாற்றிய சம்பவம் நிகழ்ந்துள்ளதாக இரத்தினபுரி பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் தெரிவித்துள்ளது.

இரத்தினபுரி பாடசாலையொன்றில் கல்வி பயிலும் இச் சிறுமி நேற்று பாடசாலையிலிருந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த போது, புதரில் மறைந்திருந்த முகமூடி அணிந்த நபரொருவர், சிறுமி அணிந்திருந்த கழுத்துப் பட்டியால் கைகளை பின்னால் கட்டி சிறுமியை கடத்த முற்பட்டுள்ளார்.

அருகில் உள்ள தோட்டத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த பெண் ஒருவர் தெய்வாதீனமாக அதனை கண்டு ஓடிச்சென்று சிறுமியைக் காப்பாற்றியுள்ளார். இது தொடர்பில் இரத்தினபுரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Exit mobile version