பிறந்து 7 நாட்களான சிசுவொன்றை பெண்ணொருவருக்கு 50,000 ரூபாவிற்கு விற்பனை செய்த தந்தையொருவரை தேடி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சிசுவை விற்பனை செய்வதற்கு இடைத்தரகராக செயற்பட்ட அனுராதபுரத்தை சேர்ந்த முச்சக்கர வண்டி சாரதியொருவரும் பெண்ணொருவரும் நேற்று(25) கைது செய்யப்பட்டதாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.

கெப்பித்திகொல்லாவ வாஹல்கட பகுதியில் இந்த கைது இடம்பெற்றுள்ளது.
சிசுவின் தாயாரின் முறைப்பாட்டிற்கமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் பேரில் சிசுவுடன் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சிசுவை விற்றதன் பின்னர் குறித்த தந்தை பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

Share.
Exit mobile version