அதிவேகமாக பயணித்த கெப் வாகனமொன்று எதிர்திசையில் இருந்து வந்த முச்சக்கரவண்டி மற்றும் காருடன் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து நேற்று (25) மாலை 6.30 மணியளவில் கினிகத்தேன பிரதான வீதியில் கினிகத்தேன அம்பகமுவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காரில் பயணித்த இருவர் மற்றும் கெப் வாகனத்தின் சாரதி படுகாயமடைந்து நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கினிகத்தேனையிலிருந்து நாவலப்பிட்டி நோக்கி அதிக வேகத்துடன் பயணித்த கெப் வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இழந்து, நாவலப்பிட்டியிலிருந்து கினிகத்தேனை நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டி மற்றும் காருடன் மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து, முச்சக்கர வண்டியும் கெப் வாகனமும் வயலில் வீழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்தின் பின்னர், கெப் வாகனத்தின் சாரதி சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்று நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதுடன், காயமடைந்தவர்கள் அம்பகமுவ பிரதேசவாசிகளுடன் சேர்ந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் கினிகத்தேன பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் மூன்று வாகனங்களும் பலத்த சேதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share.
Exit mobile version