யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஹெரோயின் போதைப்பொருளை விற்பனை செய்ய சிறுவர்கள் மற்றும் மாணவர்கள் பயன்படுத்தப்படுகின்றனர் என்ற அதிர்ச்சித் தகவலை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற சிறுவர் பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடலிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டது.

யாழ்.மாவட்டத்தில் அதிகளவில் சிறுவர்கள், பாடசாலை மாணவர்கள் ஹெரோயின் உள்ளிட்ட அபாயகரமான ஹெரோயின் போதைப்பொருள் விற்பனைக்கு பயன்படுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் பலர் அதற்கு அடிமையாக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக பெற்றோரை இழந்த பிள்ளைகள், பெற்றோரால் அதிகம் கவனிக்கப்படாத பிள்ளைகள், பெற்றோர் வெளிநாடுகளில் உள்ள சிறுவர்கள் இதற்கு அதிகமாக இலக்காவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இவற்றைக் கட்டுப்படுத்த பொலிஸார் துரித கதியில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர் எனவும் அதற்கு அனைத்துத் தரப்பினதும் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் எனவும் பொலிஸார் சுட்டிக்காட்டினர்.

Share.
Exit mobile version