தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வாகனம் சென்று கொண்டிருந்த போது தனியார் பஸ் ஒன்றின் பின் சக்கரங்கள் இரண்டும் கழன்று விழுந்ததில் விபத்து ஏற்பட்டுள்ளது.

நேற்று மாலை (23) மாலை தொடங்கொட மற்றும் வெலிபன்ன இடைமாற்றங்களுக்கு இடையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கதிர்காமத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்தில் விபத்து ஏற்பட்ட போது, ​​அதில் பெரும் எண்ணிக்கையிலான பயணிகள் பயணித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Exit mobile version