அஹுங்கல்ல போகஹபிட்டிய பகுதியில் இடம்’ பெற்ற துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் துரித விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது

அஹுங்கல்ல போகஹபிட்டிய பகுதியில் அடையாளந் தெரியாத நபர்களினால் நேற்று இரவு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்

சம்பவத்தில் காயமடைந்த இருவர் சிகிச்சைகளுக்காக பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

அஹுங்கல்ல பகுதியைச் சேர்ந்த 24 மற்றும் 29 வயதுடைய இருவர் இவ்வாறு துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்துள்ளனர்

Share.
Exit mobile version