சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சங்கத்தானைப் பகுதியில் நேற்று (22) வியாழக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவி ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

A9 வீதியால் துவிச்சக்கரவண்டியில் தனியார் வகுப்பிற்கு சென்ற மாணவி மீது குறித்த மோட்டார் சைக்கிள் மோதியதில் மாணவி தலையில் படுகாயமடைந்துள்ளார்.

இதில் சங்கத்தானை சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்த 13 வயதான பாடசாலை மாணவி ஒருவரே படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Share.
Exit mobile version