மருந்துகளின் விலை உயர்வால், புற்றுநோயாளிகள் தற்போது கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறான பிண்ணனியில் புற்று நோயாளர்களுக்கு தேவையான மருந்துகளை அன்பளிப்பாக அல்லது நன்கொடையாக வழங்கக்கூடியவர்களிடமிருந்து எதிர்பார்ப்பதாக மஹரகம அபேக்ஷா மருத்துவமனையின் பணிப்பாளர் வைத்தியர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கு வைத்தியசாலையின் நன்கொடை பிரிவுக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொள்ளலாம் அல்லது அங்குள்ள சுகாதார தாதியிடம் தொடர்பு கொள்ளலாம் எனவும் வைத்தியர் அருண ஜயசேகர மேலும் தெரிவித்தார்.

Share.
Exit mobile version