தற்போதைய சூழ்நிலையில் புதிய மின்சார இணைப்புகள் வழங்குவது குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

நாட்டில் கடந்த சில மாதங்களாக மின் உற்பத்தில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதுடன், சுழற்சி முறையில் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

இதேவேளை, இன்று மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ள போதும், ரமழான் தினமான நாளை மின் துண்டிப்பு மேற்கொள்ளப்படமாட்டாது என பொதுபயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எனினும், நாளை மறுதினம் மின்துண்டிப்பு அமுலாகவுள்ளது.

Share.
Exit mobile version