தமது தொழிற்சங்கப் போராட்டம் தொடரும் என இலங்கை பெற்றோலிய தனியார் பௌசர் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நேற்று நள்ளிரவு முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ள தொழிற்சங்கம், தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை தொடரும் எனத் தெரிவித்துள்ளது.

இந்த வேலை நிறுத்தம் காரணமாக நேற்று எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டது.

லங்கா இந்தியன் எண்ணெய் நிறுவனமும் இப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

இந்தியன் எண்ணெய் தனியார் பவுசர் உரிமையாளர்கள் சங்கமும் எரிபொருள் விநியோகத்தில் இருந்து விலகியுள்ளது.

Share.
Exit mobile version