இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிக்கிரியை நிகழ்வில் கலந்துகொள்வதற்காக பிரித்தானியா சென்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட குழுவினர் இன்று காலை நாடு திரும்பியதுடன் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தனர்.

விமான நிலையத்திற்கு பொறுப்பான கடமை அதிகாரி இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

துபாயிலிருந்து எமிரேட்ஸ் விமான சேவையில் காலை 8.23 ​​மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் மேற்கொள்ளும் முதலாவது உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயம் இதுவாகும்.

அவரது வருகையையொட்டி, விமான நிலைய வளாகத்தின் உள்ளேயும் வெளியேயும், வளாகம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன

Share.
Exit mobile version