இலங்கையில் 96 புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்கள் திறக்கப்படவுள்ளதாக லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஐ.ஓ.சி. நிறுவனம் எரிபொருள் விநியோகத்தை ஆரம்பித்து இருபது வருடங்கள் நிறைவடைந்துள்ளன.

இந்தநிலையில், நாராஹென்பிட்டி கொத்தலாவல ஐ.ஓ.சி. எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அந்த நிறுவனத்தின் இயக்குனர் விக்யன் குமார் இவ்வாறு தெரிவித்துள்ளது.

இலங்கையில் தற்போது 214 ஐ.ஓ.சி. எரிவாயு நிலையங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Share.
Exit mobile version