கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக நாட்டின் பிரச்சினைகளுக்கு விடை காண்பதே முக்கியம் என சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

நாட்டைக் கட்டியெழுப்ப இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டுமெனவும், அதற்காக இளைஞர்களின் கருத்துக்களை கேட்க வேண்டும் என்றும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

Share.
Exit mobile version