உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், எரிபொருளின் விலை ஏன் குறைக்கப்படவில்லை என்பது தொடர்பில் அரசாங்கம் உண்மைகளை தெளிவுபடுத்த வேண்டும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

உலக சந்தையில் எரிபொருள் விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கத்திற்கு ஏற்ப ஒவ்வொரு மாதமும் 1 மற்றும் 15 ஆம் திகதிகளில் எரிபொருள் விலைகள் திருத்தப்படும் என பொறுப்பான அமைச்சர் முன்னர் தெரிவித்ததாக LPBOA தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

அமைச்சர் காஞ்சன விஜேசேகர உறுதியளித்தபடி விலை சூத்திரம் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்

Share.
Exit mobile version