உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஓபன் டென்னிஸ் முதல் அரையிறுதி போட்டியில் இருந்து பிரிட்டனின் கேட்டி ஸ்வான் விலகியுள்ளார்.

போலந்தின் மக்டா லினெட்டிடம் 3-0 என்ற கணக்கில் பின்தங்கியிருந்த ஸ்வான், 16 நிமிடத்தில் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவ உதவியை நாடினார்.

எவ்வாறாயினும் மீண்டும் விளையாடக்கூடிய அளவிற்கு அவரது உடல்நிலை சரியில்லை என மருத்துவர்கள் அறிவித்ததை அடுத்து அவர் போட்டியில் இருந்து விலகினார்.

இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை சென்னை ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதி போட்டி இடம்பெறவுள்ளது.

இதில் 17 வயதான செக்குடியரசு வீராங்கனை லிண்டா, போலந்து வீராங்கனை மக்டா லினெட்டை எதிர்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது

Share.
Exit mobile version