பேராதனை பல்கலைக்கழக சட்ட பீடத்தின் இரண்டு மாணவர் குழுக்களிடையே இடம்பெற்ற மோதலில், மூவர் காயமடைந்துள்ளனர்.

இறுதி ஆண்டு மாணவர் குழுவொன்று, மூன்றாம் ஆண்டு மாணவர் குழுவொன்றின் மீது சிற்றுணவகத்தில் வைத்து தாக்குதல் நடத்தியுள்ளதாக, பேராதனை பல்கலைக்கழக கலைப் பீட பதில் பொறுப்பதிகாரியான பேராசிரியர் ஆனந்த ஜயவிக்ரம தெரிவித்துள்ளார்.

சம்பவத்தில் காயமடைந்தவர்களுள், இரு மாணவிகள் கண்டி வைத்தியசாலையிலும், ஒரு மாணவன் பேராதனை வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Share.
Exit mobile version