இரத்தினபுரி பிரதேசத்தில் 7 வயது சிறுமியை கொன்று காட்டில் இரகசியமான முறையில் புதைத்த வழக்கின் பிரதான சந்தேக நபரின் மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.

கலவான – தெல்வல கங்கபஹல பிரதேசத்தில் வைத்து சந்தேகநபர் நேற்று (15) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சமீபத்தில், இந்த சிறுமி கொல்லப்பட்டு காட்டுக்குள் இரகசியமான முறையில் புதைக்கப்பட்டிருந்த நிலையில், நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறுமியின் சடலம் செப்டெம்பர் 11ஆம் திகதி தோண்டி எடுக்கப்பட்டது.

பின்னர், சம்பவம் தொடர்பில் சிறுமியின் தாயும் மற்றுமொரு பெண்ணும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், பிரதான சந்தேக நபரின் 30 வயதுடைய மனைவி நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

Share.
Exit mobile version