இலங்கை அணியின் முன்னாள் வீரர் மஹேல ஜயவர்தனவுக்கு, மும்பை இந்தியன்ஸ் அணியில், புதிய பதவி ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

மஹேல ஜயவர்தன, மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து விலகியுள்ள நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் உலகளாவிய செயற்திறன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு உலகளாவிய கிரிக்கெட் பாரம்பரியத்தை உருவாக்கும் நோக்கத்துடன், புதிய பதவி வழங்கப்பட்டுள்ளதாக, அந்த அணியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மும்பை இந்தியன்ஸ், எமிரேட்ஸ் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கேப்டவுன் மும்பை இந்தியன்ஸ் முதலான மூன்று அணிகளின் செயற்பாடுகளை ஒருங்கிணைக்கும் நோக்கில், இந்தப் புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது.

அதேநேரம், இந்திய அணியின் முன்னாள் வீரர் ஷஹீர் கான், மும்பை இந்தியன்ஸ் அணியின், உலகளாவிய கிரிக்கட் மேம்பாட்டுத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Share.
Exit mobile version