அரச ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதெல்லையை 60ஆக வரையறுக்க அரசாங்கம் எடுத்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கான சுற்றறிக்கை இன்று (14) வௌியிடப்படவுள்ளது.

அதற்கமைவாக, அரச ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதெல்லை 60 ஆக மட்டுப்படுத்தப்படுமென அமைச்சின் செயலாளர் மாயாதுன்னே தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், பல அத்தியாவசிய சேவைகளுக்கு இந்த அறிவிப்பு செல்லுபடியாகாது எனவும் அவர் கூறியுள்ளார்.

Share.
Exit mobile version