வத்தளை தீ விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தனிப்பட்ட தகராறு காரணமாக வீடொன்றுக்கு தீ வைக்கப்பட்டதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வத்தளை ஹந்தல பிரதேசத்தை சேர்ந்த 57 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

18 வயதுடைய இளைஞனும், தீயை மூட்டிய நபரும் தீயில் சிக்கி தீக்காயங்களுடன் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தீ வைப்புச் செய்த நபர் நாவலப்பிட்டி பகுதியைச் சேர்ந்தவர் எனவும், அவரது மனைவி தனிப்பட்ட தகராறு காரணமாக தீக்குளித்த வத்தளை பகுதியிலுள்ள வீட்டிற்கு வந்துள்ளார்.

சந்தேகத்திற்கிடமான தீவைப்பு செய்த நபரும் தனது மனைவியைத் தேடி வீட்டுக்கு வந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

தகராறு காரணமாக, சந்தேக நபர் வீட்டிற்கு தீ வைத்துள்ளார்.

இதன்போது வீட்டில் இருந்த 57 வயதுடைய பெண், வீட்டில் இருந்த 18 வயதுடைய இளைஞன் மற்றும் தீ வைத்த நபருக்கு தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share.
Exit mobile version