இடைக்கால அரசாங்கம் தொடர்பில் பொதுஜன பெரமுன கட்சி மட்டத்தில் இதுவரை எவ்வித தீர்மானங்களையும் முன்னெடுக்கவில்லை என கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தை ஸ்தாபிப்பது தொடர்பிலான ஜனாதிபதியின் தீர்மானம் குறித்து எதிர்வரும் வாரம் கட்சி ரீதியில் உறுதியான தீர்மானத்தை அறிவிப்போம் என அவர் குறிப்பிட்டுள்ளார்..

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கே பாராளுமன்றில் பெரும்பான்மை பலம் உள்ள நிலையில் இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிக்க முயற்சிப்பது எந்தளவிற்கு நியாயமானது என்ற தர்க்கம் காணப்படுவதாகவும் சாகர காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.

Share.
Exit mobile version