நாட்டை நேசிக்காத சிலர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் இணைந்து சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருவதைத் தடுத்து வருவதாகவும், யுத்தத்துக்குப் பின்னர் புலிகள் அமைப்பு பலம்பெற்றுவிட்டதாகவும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் மேஜர் சுதர்ஷன தெனிபிடிய தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இன்று (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

புலிகளுடன் இணைந்து வெளிநாட்டவர்கள் இலங்கைக்கு வருவதைத் தடுக்க சிலர் முயற்சிக்கிறார்கள். இதுவொரு பாரதூரமானப் பிரச்சினை. எனவே அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டு்ம் எனவும் கூறினார்.

Share.
Exit mobile version