டுபாயில் நேற்று நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியில், பாகிஸ்தானை இலங்கை அணி தோற்கடித்து சம்பியன் பட்டத்தை வென்றதை, ஆப்கானிஸ்தானில் இளைஞர்கள் உற்சாகத்துடன் கொண்டாடினார்கள்.

கடந்த புதன்கிழமை ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ரசிகர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்தை தொடர்ந்து, பாகிஸ்தானின் இந்த படுதோல்வியை ஆப்கான் ரசிகர்கள் கொண்டாடினார்கள். வீதிகளில் நடனமாடியும், பட்டாசுகளை வெடித்தும் அவர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.

நேற்றைய போட்டியில் பாகிஸ்தான் அணியினரின் மோசமான களத்தடுப்பை விமர்சித்தும் சமூகவலைதளங்களில் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.

Share.
Exit mobile version